ஒரேநாளில் 290 பேருக்கு கொரோனா


ஒரேநாளில் 290 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jun 2021 7:58 PM GMT (Updated: 11 Jun 2021 7:58 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 42,151 ஆக உயர்ந்துள்ளது.
 இதுவரை 38,453 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 485 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,219 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 பேர் பலி 
 நோய் பாதிப்பிற்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.  அரசு ஆஸ்பத்திரிகளில் 1,481 படுக்கைகள் உள்ள நிலையில் 833 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 648 படுக்கைகள் காலியாக உள்ளன.
சிகிச்சை மையங்களில் 1753 படுக்கைகள் உள்ள நிலையில் 435 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1318 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு 
விருதுநகர் பசும்பொன் நகர், சீதக்காதி தெரு, ராமமூர்த்தி ரோடு, சின்ன பேராலி, கட்டபொம்மன்தெரு, குல்லூர்சந்தை, அகதிகள் முகாம், சூலக்கரை, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பாண்டியன் நகர், அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோட்டையூர், கல்லுமடை, திருத்தங்கல், நொச்சிகுளம், பள்ளிமடம், கூமாபட்டி, கீழ்குடி, செங்குளம், புளியங்குளம், கட்டங்குடி, கோவிலாங்குளம், காரியாபட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, சிவகாசி, மல்லாங்கிணறு, பாலையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வலியுறுத்தல்
 நேற்று மாவட்ட பட்டியலில் 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மாநிலப்பட்டியலில் 290 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலின்படி 4 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை குறித்து தொற்று ேநாய் நிபுணர் தெரிவிக்கையில், செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் முறையாக, தரமாக செய்யப்படுகிறதா என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story