பொது வினியோக திட்டத்திற்காக 2 ஆயிரத்து 500 டன் அரிசி


பொது வினியோக திட்டத்திற்காக 2 ஆயிரத்து  500 டன் அரிசி
x
தினத்தந்தி 12 Jun 2021 4:18 PM GMT (Updated: 12 Jun 2021 4:18 PM GMT)

திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு பொது வினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்:
திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு பொது வினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
பொதுவினியோக திட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
2 ஆயிரத்து 500 டன் அரிசி  
அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதில் 42 பெட்டிகளில் ஏற்பட்ட 2 ஆயிரத்து 500 டன் அரிசி காட்பாடிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story