களக்காட்டில் 21 மதுபாட்டில்கள் பறிமுதல்


களக்காட்டில் 21 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jun 2021 7:27 PM GMT (Updated: 12 Jun 2021 7:27 PM GMT)

களக்காட்டில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து, 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

களக்காடு:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் கீழப்பத்தை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள கலையரங்கம் அருகே சென்ற போது கீழப்பத்தை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் மதி (வயது 25) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அதில் 21 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story