புதிதாக 273 பேருக்கு கொரோனா


புதிதாக 273 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jun 2021 7:57 PM GMT (Updated: 12 Jun 2021 7:57 PM GMT)

மாவட்டத்தில் புதிதாக 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர்.

விருதுநகர், 
மாவட்டத்தில் புதிதாக 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். 
உயர்வு  
மாவட்டத்தில் மேலும் 273 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 42,486 ஆக உயர்ந்துள்ளது.
 38,897 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 444 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,042 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 8 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 488 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்பு 
  அரசு ஆஸ்பத்திரிகளில் 1448 படுக்கைகள் உள்ள நிலையில் 865 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 623 படுக்கைகள் காலியாக உள்ளன.  சிகிச்சை மையங்களில் 1753 படுக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1339 படுக்கைகள் காலியாக உள்ளன. விருதுநகர் பாண்டியன் நகர், அல்லம்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், சூலக்கரை, காந்திநகர், மருளூத்து, சின்ன மருளூத்து, சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
4 சதவீதம் 
மேலும் அகத்தாகுளம், மல்லாங்கிணறு, காரியாபட்டி, நத்தம்பட்டி, சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, சிவகாசி, திருத்தங்கல், திருச்சுழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மாவட்ட பட்டியலில் 47 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் 273 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று பாதிப்பு சதவீதம் 3 ஆக குறைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2-வது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் வச்சக்காரபட்டி, மெட்டுகுண்டு, பட்டம்புதூர், தாதம்பட்டி, சின்னையாபுரம், செந்தி விநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி 4 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story