ஊரடங்கை மீறியதாக 176 பேர் மீது வழக்குப்பதிவு


ஊரடங்கை மீறியதாக 176 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 Jun 2021 5:33 PM GMT (Updated: 13 Jun 2021 5:33 PM GMT)

கொரோனா ஊரடங்கை மீறியதாக 176 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 20-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. 
அந்தவகையில் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 98 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.19 ஆயிரத்து 600, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் 24 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
4 பேர் கைது
மேலும், ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 50 வழக்குகள் பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது விற்றதாக 4 வழக்குப்பதிந்து 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 வெளிமாநில மதுப்பாட்டில் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 176 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story