கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 3 பேர் பலி


கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 7:23 PM GMT (Updated: 13 Jun 2021 7:23 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

66 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 19 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 16 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 17 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 14 பேரும் என மொத்தம் 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,381 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரம்மதேசம் கடைவீதியை சேர்ந்த 63 வயதுடைய மூதாட்டியும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவரும் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.
886 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் 9,337 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 210 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 886 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 243 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. நேற்று மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 994 பேருக்கும், கோவாக்சின் தடுப்பூசி 10 பேருக்கும் போடப்பட்டது. 1,990 கோவிஷீல்டு தடுப்பூசியும், 900 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

Next Story