டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு


டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 7:23 PM GMT (Updated: 13 Jun 2021 7:23 PM GMT)

35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது.

அரியலூர்:

டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் திண்டாடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், கூடுதல் தளர்வுகளாக தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்திருந்தது.
முன்னேற்பாடு பணிகள்
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 53 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன. இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நேற்று மும்முரமாக நடைபெற்றன. அரியலூர் நகரில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு, மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானம் வாங்குவதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
கடைகளுக்கு முன்பு வட்டங்கள் போடப்பட்டு, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் கொடுக்கப்படும் என்று பணியாளர்கள் தெரிவித்தனர். தா.பழூரில் 2 டாஸ்மாக் கடைகளும், கோட்டியால் பாண்டிபஜாரில் ஒரு கடையும், கோடாலி கிராமத்தில் ஒரு கடையும் அமைந்துள்ளது. அங்கு மது பிரியர்கள் சமூக இடைவெளியுடன் மது வாங்கி செல்வதற்கு வசதியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று செய்யப்பட்டது. கூட்டமாக வந்து மது வாங்குபவர்களை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மது பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Next Story