பென்னாகரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


பென்னாகரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2021 12:09 AM GMT (Updated: 17 Jun 2021 12:09 AM GMT)

பென்னாகரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

பென்னாகரம்:
 பென்னாகரம் அருகே உள்ள பெரியபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மகள் கவுதமி (வயது 24). இவருக்கும், சேலம் மாவட்டம் மேட்டூர் புதுசாம்பள்ளியை சேர்ந்த பாபு என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதமி தனது அம்மா சித்ராவை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட கவுதமி நேற்று அதிகாலை உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story