தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு 179 பேர் பாதிப்பு


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு 179 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 12:09 AM GMT (Updated: 17 Jun 2021 12:09 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு 179 பேர் பாதிப்பு

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 179 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,989 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 304 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 179 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,862 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 177பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,911 ஆகும்.

Next Story