சாராயம் காய்ச்சியவர் கைது


சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 12:09 AM GMT (Updated: 17 Jun 2021 12:09 AM GMT)

சாராயம் காய்ச்சியவர் கைது

பந்தலூர்

பந்தலூர் அருகே தேவாலா அட்டி புதியகுன்னு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்த 40 லிட்டர் சாராய ஊறல், 1 லிட்டர் சாராயம் மற்றும் அதனை காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த புஸ்பகாந்த்(வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story