வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2021 7:07 PM GMT (Updated: 17 Jun 2021 7:07 PM GMT)

கூடங்குளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள பார்க்கநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் சுடலையாண்டி (வயது25). இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் சுடலையாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுடலையாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story