மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி புதிதாக 21 பேருக்கு தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி புதிதாக 21 பேருக்கு தொற்று
Published on

புதுக்கோட்டை:

புதிதாக 21 பேருக்கு தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் சராசரியாக 20 அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை மாவட்டத்தில் 29 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 201 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 2 பேர் பலி

இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com