9 பேர் மீது வழக்கு


9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jun 2021 6:53 PM GMT (Updated: 18 Jun 2021 6:53 PM GMT)

இளையான்குடியில் ஊரடங்கில் விதிமீறலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இளையான்குடி,

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இளையான்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஊரடங்கு விதிமுறைகளை யாராவது மீறுகிறார்களா? என கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் தேவையின்றி ஊர் சுற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story