தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jun 2021 7:39 PM GMT (Updated: 18 Jun 2021 7:39 PM GMT)

தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திசையன்விளை:

இட்டமொழி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் குமார் (வயது 47) தொழிலாளி. இவருக்கும், இட்டமொழி தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர் மகன் செல்வின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று குமார் வேலைக்கு சென்று விட்டு இட்டமொழி புதூர் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது செல்வின், அவரது நண்பருடன் சேர்ந்து குமாரை வழிமறித்து தாக்கி, அவரை தரையில் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் குமார் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக குமார், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக செல்வின் மற்றும் அவரது நண்பர் மீது வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story