நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை


நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 Jun 2021 7:51 PM GMT (Updated: 18 Jun 2021 7:51 PM GMT)

ஆனித்திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-தேதி தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

நேற்று உற்சவர் இருப்பிடத்தில் வைத்து காலையில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இந்த திருவிழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Next Story