போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 4:36 PM GMT (Updated: 19 Jun 2021 4:36 PM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் கரையடியூரை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் மணிகண்டன் என்ற கோபி (வயது 26). இவர் 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமிபிரபா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

Next Story