மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு


மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 19 Jun 2021 4:41 PM GMT (Updated: 19 Jun 2021 4:41 PM GMT)

கோவில்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்தவர் உய்க்காட்டான் (வயது 23). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உறவினரான வீரவாஞ்சிநகரை சேர்ந்த பேச்சியம்மாள் (63) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கயத்தாறுக்கு புறப்பட்டு சென்றார். சாலைப்புதூர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது பேச்சியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து பேச்சியம்மாள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story