சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2021 6:50 PM GMT (Updated: 19 Jun 2021 6:50 PM GMT)

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 25). இவர் 17 வயது சிறுமியை கடந்த 13-ந் தேதி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு நலஅலுவலர் மாலதி, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்த காமராஜை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும், திருணத்திற்கு உதவியாக இருந்த காமராஜின் தந்தை முருகேசன் (64), அண்ணி ஜோதி (26) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story