முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2021 7:04 PM GMT (Updated: 19 Jun 2021 7:04 PM GMT)

முதியவர் தற்கொலை செய்து கொண்டார்

காரைக்குடி
காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம்(வயது 65). இவர் காந்திதிடல் அருகே கடை வைத்து சலவை தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதை குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்து, வீட்டின் மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story