விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Jun 2021 7:57 PM GMT (Updated: 19 Jun 2021 7:57 PM GMT)

விபத்தில் சிக்கிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

செந்துறை:
பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் கருப்பன்(வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு வெள்ளூரில் இருந்து பொட்டவெளி வழியாக நல்லறிக்கைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story