கொரோனாவுக்கு 21 பேர் பலி மேலும் 517 பேருக்கு நோய் தொற்று


கொரோனாவுக்கு 21 பேர் பலி மேலும் 517 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 20 Jun 2021 6:44 PM GMT (Updated: 20 Jun 2021 6:44 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 517 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 517 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
517 பேருக்கு பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மேலும் 517 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 
இவர்களில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 170 பேர், எடப்பாடியில் 20 பேர், காடையாம்பட்டியில் 12 பேர், கொளத்தூரில் 19 பேர், கொங்கணாபுரத்தில் 7 பேர், மகுடஞ்சாவடியில் 26 பேர், மேச்சேரியில் 10 பேர், நங்கவள்ளியில் 5 பேர், ஓமலூரில் 36 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 9 பேர், சங்ககிரியில் 17 பேர், தாரமங்கலத்தில் 13 பேர், வீரபாண்டியில் 37 பேர், ஆத்தூரில் 10 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெளி மாவட்டங்கள்
கெங்கவல்லியில் 15 பேர், பனமரத்துப்பட்டியில் 10 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 14 பேர், தலைவாசலில் 15 பேர், வாழப்பாடியில் 21 பேர், ஏற்காட்டில் 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆத்தூர் நகராட்சியில் 5 பேர், மேட்டூர் நகராட்சியில் 3 பேர், நரசிங்கபுரம் நகராட்சியில் 4 பேர் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 7 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 3 பேர், கள்ளக்குறிச்சியில் வந்த 6 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 4 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
900 பேர் டிஸ்சார்ஜ்
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. 
மாவட்டத்தில் இதுவரை 78 ஆயிரத்து 47 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 900 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேநேரத்தில் 4 ஆயிரத்து 392 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
21 பேர் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,376 ஆக உயர்ந்துள்ளது.

Next Story