தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Jun 2021 5:51 PM GMT (Updated: 21 Jun 2021 5:51 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.

தர்மபுரி:
கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்களும் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தொற்று கண்டறியப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
191 பேர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,318 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 281 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,151 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 191 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,539 ஆகும்.

Next Story