கரூர் மாவட்டத்தில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று


கரூர் மாவட்டத்தில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 Jun 2021 6:25 PM GMT (Updated: 21 Jun 2021 6:25 PM GMT)

கரூர் மாவட்டத்தில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்
101 பேருக்கு தொற்று 
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் சாவு 
அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 116 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 771 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story