வாலிபர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு


வாலிபர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 3:11 PM GMT (Updated: 22 Jun 2021 3:11 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 21-ந்தேதி வரை கொரோனா வைரஸ் தொற்றால் 564 பேர் உயிரிழந்தனர். ஆனால், நேற்று முன்தினம் கொரோனா இறப்பு எதுவும் இல்லை. 

இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர், 80 வயது மூதாட்டி, ஆத்தூர் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர், 89 வயது மூதாட்டி, பழனியை சேர்ந்த 70 வயது முதியவர், மணப்பாறையை சேர்ந்த 83 வயது முதியவர் ஆகிய 6 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

 இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று 11 பெண்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 214 ஆனது. அதேநேரம் கொரோனாவில் இருந்து 150 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 490 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story