ரூ2 ஆயிரம் வழங்காமல் இழுத்தடிப்பு


ூ.2 ஆயிரம் வழங்காமல் இழுத்தடிப்பு
x
ூ.2 ஆயிரம் வழங்காமல் இழுத்தடிப்பு
தினத்தந்தி 22 Jun 2021 3:40 PM GMT (Updated: 22 Jun 2021 3:40 PM GMT)

ரூ2 ஆயிரம் வழங்காமல் இழுத்தடிப்பு

கோவை

கோவை ஹோப்காலேஜ் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ருக்மணி. சித்ரா பகுதியில் உள்ள கண் மருத்துவமனை குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். 

இவர் தனது குடும்ப அட்டை மூலம் முதல்-அமைச்சர் அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக காந்தி வீதியில் உள்ள சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலை கடை எண் 91-க்கு சென்று கடந்த 16-ந் தேதி டோக்கன் பெற்றுள்ளார். 

பின்னர் கடைக்கு சென்று பணம் மற்றும் பொருட்களை கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர் மறுநாள் வருமாறு தெரிவித்துள்ளார். மறுநாளும் சென்றுள்ளார். இவ்வாறு 4 தினங்களாக கொடுக்காமல் கடை ஊழியர் இழுத்தடித்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு மூலம், ருக்மணி கூட்டுறவு பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். 

இது குறித்து கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறும்போது, அப்பாவி பெண்கள் ரேஷன் கடைக்கு சென்றால் இழுத்தடிக்கப்படு கிறார்கள். 

சிங்காநல்லூரில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை கடைக ளில் பொதுமக்கள் பொருள் வாங்காமலே குறுஞ்செய்தி வருகிறது. அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story