வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது


வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 7:48 PM GMT (Updated: 22 Jun 2021 7:48 PM GMT)

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சக்திவேல்(வயது 25). இவர் தனது செல்போன் தொலைந்து விட்டதாக கூறி அப்பகுதியில் தேடியுள்ளார். மேலும் செல்போனை யாரோ எடுத்துவிட்டதாக கூறி, திட்டியதாக கூறப்படுகிறது. அதை கேட்டு, அங்கு நின்று கொண்டிருந்த இலையூர் கோரியபட்டி கிராமத்தை சேர்ந்த பாலுசாமியின் மகன் பாபா என்ற பிரபாகரன்(26), யாரை திட்டுகிறாய்? என்று கேட்டு சக்திவேலை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலின் கைகளில் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த சக்திவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story