கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 Jun 2021 7:00 PM GMT (Updated: 23 Jun 2021 7:00 PM GMT)

கிருஷ்ணகிரியில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல் 55 வயது பெண் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 39 ஆயிரத்து 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37 ஆயிரத்து 468 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 1,278 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உள்ளது.

Next Story