புதிதாக 91 பேருக்கு கொரோனா


புதிதாக 91 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jun 2021 7:27 PM GMT (Updated: 23 Jun 2021 7:27 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது. 
உயர்வு 
மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 44,049 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,074 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
 நேற்று மட்டும் 110 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 784 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.
படுக்கைகள்
 மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,528 படுக்கைகள் உள்ள நிலையில் 1,249 படுக்கைகள் காலியாக உள்ளன. 279 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சிகிச்சை மையங்களில் 1,842 படுக்கைகள் உள்ள நிலையில் 97 படுக்கைகளில் நோய் பாதிக்கப்படோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,745 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர், சூலக்கரை, ரோசல்பட்டி, அல்லம்பட்டி, பட்டேல் ரோடு, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு 
 மேலும் திருச்சுழி, பந்தல்குடி, கரிசல்குளம், கோவிலாங்குளம், கடம்பன்குளம், பனையூர், சொக்கநாதன்புத்தூர், வத்திராயிருப்பு, ஆனைக்குட்டம், ஜமீன் சத்திரப்பட்டி, சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
மாவட்ட பட்டியலில் 52 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 91 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2.5 ஆக உள்ளது. 

Next Story