பொள்ளாச்சி பகுதியில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு


பொள்ளாச்சி பகுதியில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2021 8:05 PM GMT (Updated: 23 Jun 2021 8:05 PM GMT)

பொள்ளாச்சி பகுதியில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தடுப்பு நடவடிக்கை

பொள்ளாச்சி வருவாய் கோட்ட பகுதியில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

இந்த நிலையில் பாதிக்கப்படுவோரை விட, குணமடைந்து வீட்டிற்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. 

64 பேருக்கு கொரோனா 

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 6 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 11 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 15 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 18 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 9 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 5 பேருக்கும் சேர்த்து மொத்தம் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

வால்பாறை தாலுகாவில் 3-வது நாளாக புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 19 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. 

இந்த முகாமில் 1277 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். 937 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

30 வீதிகள் 

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தாலுகா பகுதிகளில் இதுவரைக்கும் 10 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 50 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 வீடுகளில் 175 பேர் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அதிகம் பாதித்த 30 வீதிகளை கட்டுப்படுத்தப்பட்டு பகுதியாக உள்ளன.

கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப் பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story