பள்ளிபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை


பள்ளிபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2021 8:05 PM GMT (Updated: 25 Jun 2021 10:30 PM GMT)

பள்ளிபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் காவேரி பிரேம்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). நூல் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த சரளா (20) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் சரளா மனமுடைந்து காணப்பட்டார்.

மேலும், வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரளாவை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சரளா தற்கொலை குறித்து தலவல் அறிந்த பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசியும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story