கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 27 Jun 2021 4:13 PM GMT (Updated: 27 Jun 2021 4:13 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது


கள்ளக்குறிச்சி

192-ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 26 ஆயிரத்து 612 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 191 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191-ல் இருந்து 192-ஆக உயர்ந்துள்ளது.

123 பேருக்கு தொற்று உறுதி 

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 750 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 123 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 612-ல் இருந்து 26 ஆயிரத்து 735-ஆக உயர்ந்துள்ளது. நொய் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,136 பேர்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story