ரேஷனில் தரமான அரிசி வழங்க கோரிக்கை


ரேஷனில் தரமான அரிசி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2021 7:02 PM GMT (Updated: 27 Jun 2021 7:02 PM GMT)

வாராப்பூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன், வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
 வாராப்பூர் ஊராட்சியில் 4 கிராமங்களில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையான, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மாதம் தோறும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருட்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது வழக்கப்பட்டு வரும் ரேஷன் அரிசி தரமற்றதாக இருக்கிறது. எனவே தரமான ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.


Next Story