டிபன் கடைக்காரருக்கு கத்தி வெட்டு; வாலிபர் கைது


டிபன் கடைக்காரருக்கு கத்தி வெட்டு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 9:30 AM IST (Updated: 28 Jun 2021 9:30 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம், டிபன் கடைக்காரரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, சுப்பிரமணிய நகரில் வசித்து வருபவர் தயாளன் (வயது 46). இவர் குமரப்பேட்டை கிராமத்தில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர், ஆரணி ஆற்றுக்கு சென்றார். அப்போது இதே பகுதியில் வசித்து வரும் விக்கி, குமார் (19) உள்ளிட்ட 3 பேர் கத்தியால் தயாளனை வெட்டி விட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.1,800-ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து, தலைமறைவான விக்கி மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story