வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை


வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 29 Jun 2021 4:53 PM GMT (Updated: 29 Jun 2021 4:55 PM GMT)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை,

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் வன்கொடுமை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வடக்கிப்பட்டியை சேர்ந்தவர் உதயச்சந்திரன் (வயது 30). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி அதே பகுதியில் 4-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அவரது தாய், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் உதயச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
6 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு வழங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உதயச்சந்திரனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உதயச்சந்திரனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் போலீசார் வேனில் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் புலன்விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் (தற்போது முசிறியில் பணியாற்றுகிறார்) மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.

Next Story