மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது


மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 8:03 PM GMT (Updated: 29 Jun 2021 8:03 PM GMT)

மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அம்பலவர் கட்டளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் அரசு அனுமதியின்றி சுண்டக்குடி மருதையாற்று படுகை பகுதிகளில் இருந்து அரியலூர் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் வி.கைகாட்டி அருகே உள்ள முனியன்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த பிரகாசை(வயது 23) கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

Next Story