பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2021 11:17 AM GMT (Updated: 1 July 2021 11:17 AM GMT)

பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது.

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜோதிகுமார் (வயது 45). பா.ஜ.க. நிர்வாகியான இவர், வீட்டின் தரை தளத்தில் கட்சி அலுவலகம் வைத்துள்ளார். இவரது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அந்த கும்பலின் தலைவனான மதுரை பாலா, வெடிகுண்டு வீசி கொன்று விடுவதாக செல்போனில் ஜோதிகுமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோதிகுமார் அளித்த புகாரின்பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த வேலு (44), அமைந்தகரையை சேர்ந்த சஞ்சய் என்ற சஞ்சய்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

Next Story