கார் மோதி வாலிபர் பலி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 1 July 2021 7:38 PM GMT (Updated: 1 July 2021 7:38 PM GMT)

கார் மோதி வாலிபர் பலியானார்.

துவரங்குறிச்சி
சிவகங்கை மாவட்டம், கோமாளி பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும், சுரேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story