மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2021 7:47 PM GMT (Updated: 1 July 2021 7:47 PM GMT)

மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீன்சுருட்டி:

மணல் கடத்தல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் சேகர்(வயது 34), பிரபாகரன் (32), மாதவன். இவர்கள் 3 பேரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் இருந்து சாக்குகளில் மணல் அள்ளி, மோட்டார் சைக்கிளில் குழவடையான் கிராமத்திற்கு கடத்தி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து வேம்பகுடி கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா (51) கொடுத்த புகாரின்பேரில், 3 பேர் மீதும் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து சேகர், பிரபாகரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்.
கைது
இதில் அவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிமெண்டு சாக்குகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சேகர், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து, மணல் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய மாதவனை தேடி வருகிறார்.

Next Story