தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 11:56 AM GMT (Updated: 2 July 2021 11:56 AM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (வயது 26). கூலித் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் விரைந்து சென்று மாரிக்கண்ணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Next Story