தூத்துக்குடி அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவர் கைது
தினத்தந்தி 2 July 2021 12:53 PM GMT (Updated: 2 July 2021 12:53 PM GMT)
Text Sizeதூத்துக்குடி அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று வாகைகுளம் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதியின்றி முறைகேடாக மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மாரியப்பனை கைது செய்தனர். லாரி மற்றும் 3 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire