விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
x
தினத்தந்தி 2 July 2021 4:33 PM GMT (Updated: 2 July 2021 4:33 PM GMT)

66 பேருக்கு நோய் தொற்று

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 42,537 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 330 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 41,728 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் நாராயணன் நகரை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணும், திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,603 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 41,779 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story