சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 2 July 2021 5:39 PM GMT (Updated: 2 July 2021 5:39 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரூர்:
அரூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 70). இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் முதியவர் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Next Story