நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக 132 பேருக்கு கொரோனா பாதிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக 132 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 6:03 PM GMT (Updated: 2 July 2021 6:03 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதியதாக 132 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதியதாக 132 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
132 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 44,810 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்ட பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,811 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,943 ஆக உயர்ந்தது. நேற்று 210 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.
1,579 பேருக்கு சிகிச்சை
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 418 பேர் பலியாகி உள்ள நிலையில், 42,946 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 1,579 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story