சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு


சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு
x
தினத்தந்தி 2 July 2021 7:12 PM GMT (Updated: 2 July 2021 7:12 PM GMT)

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வடுக பைரவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதற்கான ஏற்பாடுகளை அஷ்டமி வழிபாட்டு குழுவினர் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story