100 மதுபாட்டில்கள் பறிமுதல்


100 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2021 7:30 PM GMT (Updated: 2 July 2021 7:30 PM GMT)

செட்டியார்பட்டி அருகே 100 மதுபாட்டில்களை போலீசார் கைது செய்தனர்.

தளவாய்புரம், 
செட்டியார்பட்டி - முகவூர் செல்லும் சாலையில் தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தளவாய்புரம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் (வயது 50) என்பதும், 100 மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த  மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story