சிறுமி மாயம்


சிறுமி மாயம்
x
தினத்தந்தி 2 July 2021 7:30 PM GMT (Updated: 2 July 2021 7:30 PM GMT)

வீட்டில் தூங்கிய சிறுமி மாயமானார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால், இது குறித்து புவனேஸ்வரியின் தாய் கொளஞ்சி, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story