கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி


கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 2 July 2021 8:12 PM GMT (Updated: 2 July 2021 8:12 PM GMT)

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 283 பேர் மட்டுமே கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 720 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி 4,098 பேருக்கு போடப்பட்டுள்ளது. தற்போது 4,990 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில், மேலும் 2,500 கோவிஷீல்டு தடுப்பூசி வரவுள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story