மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்


மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 5:28 PM GMT (Updated: 3 July 2021 5:28 PM GMT)

மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி, 

பெட்ரோல்,  டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு  கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இதற்கு  நகர செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.எம். மூர்த்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் குலோப் ஆகியோர் முன்னலை வகித்தனர். 

 ஆர்ப்பாட்டத்தின் போது, மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்றும் நூதன போராட்டத்தை நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

இதில், வட்ட செயவாளர் மதியழகன், மாவட்டக் குழு குணசேகர், பண்ருட்டி ஒன்றிய பொருப்பாளர் ஞானசேகர், பண்ருட்டி வட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்டக் குழு முருகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story