கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 6:21 PM GMT (Updated: 3 July 2021 6:21 PM GMT)

கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள முட்புதர் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த சிவா (வயது 46), பாலன் (53), காளியப்பனூரை சேர்ந்த பாபு (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
இதேபோல் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவடியான் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சரண் (24) என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்து மொத்தம் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story