மேலும் 58 பேருக்கு கொரோனா


மேலும் 58 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 July 2021 6:33 PM GMT (Updated: 3 July 2021 6:33 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,727 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,662 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 61 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. 533 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.  அரசு ஆஸ்பத்திரிகளில் 293 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை மையங்களில் 64 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   விருதுநகர் நர்சிங் பயிற்சி பள்ளி, லட்சுமி நகர், அல்லம்பட்டி, பாண்டியன் நகர், சூலக்கரை, என்.ஜி.ஓ. காலனி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி என மாவட்டம் முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2 ஆக உள்ளது.

Next Story